சட்டமேதை அண்ணல் அம்பேத்கரின் 132 வது பிறந்தநாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் அம்பேத்கரின் பிறந்த நாளை முன்னிட்டு இந்தியாவில் பல அரசியல் கட்சி தலைவர்கள் அம்பேத்கரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதன்படி மகாராஷ்டிராவின் லத்தூர் நகரில் உள்ள பூங்காவில் மொசைக் கலைபாணியில் 18 ஆயிரம் நோட்டு புத்தகங்களை கொண்டு அம்பேத்கரின் ஒரு பெரிய உருவப்படம் ஒன்று பிரம்மாண்டமாக செய்யப்பட்டுள்ளது. இதற்காக 18 கலைஞர் இணைந்து 11 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் உருவாக்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இந்த புத்தகங்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டன. தற்போது அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி பலரின் பாராட்டுகளையும் பெற்று வருகிறது.