திருப்பதியில் ஏழுமலையான தரிசனம் செய்ய வரக்கூடிய பக்தர்கள் சிரமம் இல்லாமல் தரிசனம் செய்வதற்காக ரூ.300 ஆன்லைன் தரிசன டிக்கெட்டுகள், நேர ஒதுக்கீடு இலவச தரிசன டிக்கெட் வழங்கப்பட்டு வருகிறது. இதேபோன்று நடைபாதையில் தரிசனத்துக்கு வரும் பக்தர்களுக்கும் இலவச நேர ஒதுக்கீடு டிக்கெட் வழங்க வேண்டும் என தேவஸ்தானத்துக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். இதனை ஏற்ற தேவஸ்தானம் அதிகாரிகள் 2,083-வது படியில் காளி கோபுரம் அருகில் அலுவலகம் அமைத்து தரிசன டிக்கெட் வழங்கி வந்தனர்.

தினசரி அதிகாரிகள் நடந்து சென்று டிக்கெட் வழங்குவதில் பல சிக்கல்கள் ஏற்பட்டது. அதன்பின் அலிப்பிரியில் நடைபாதை இலவச தரிசன டிக்கெட்டுகளை வழங்குவதற்கு தேவஸ்தான அதிகாரிகள் அலுவலகம் அமைத்து இன்று காலை முதல் பக்தர்களுக்கு டிக்கெட்டுகளை வழங்கி வருகின்றனர். இலவச தரிசன டிக்கெட் பெற்று செல்லக்கூடிய பக்தர்கள் 1,240-வது படி அருகில் அமைக்கப்பட்டுள்ள அலுவலகத்தில் தரிசன டிக்கெட்டை ஸ்கேன் செய்து கொண்டு நேர ஒதுக்கீடு பெற்று தரிசனத்திற்கு செல்ல வேண்டும் என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.