திரிபுராவின் கோமதி மாவட்டத்தில் அனில் பிஸ்வாஸ் என்பவர் சென்ற 3 வருடங்களாக சாம்பல் மற்றும் வெள்ளை நிறம் கொண்ட “மோகி” எனும் ஆண் பூனை ஒன்றை வளர்த்து வருகிறார். இந்த ஆண் பூனை கடந்த சில தினங்களுக்கு முன் பெண் பூனை குட்டியை ஈன்றது. அதை பார்க்க நூற்றுக்கணக்கான மக்கள் அனில் பிஸ்வாஸின் வீட்டிற்கு திரண்டு வருகின்றனர்.

அதன்பின்  பிஸ்வாஸ் இதுகுறித்து உள்ளூர் கால்நடை மருத்துவர்களுக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் பிஸ்வாஸின் வீட்டிற்குச் சென்று பூனையை பரிசோதித்தனர். எனினும் இதற்கு விளக்கமளிக்க முடியாமல் திணறினர். இது இயற்கையின் விதியை சவால் செய்யும் சம்பவம் என்று அறிவியல் ஆராச்சியாளர் விளக்கம் கொடுத்து உள்ளனர்.