சமூகவலைத்தள பிரபலம் சப்னா கில்லுடன் ஏற்பட்ட வாக்குவாதம் குறித்த வழக்கில் பிரித்வி ஷாவிற்கு மும்பை உயர்நீதிமன்றமானது நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது. மும்பையில் உள்ள ஒரு விடுதியில் சப்னா கில் மற்றும் பிரித்வி ஷா இடையில் அண்மையில் வாக்குவாதம் ஏற்பட்டது. இருவரும் தாக்கப்பட்டதாக புகார் எழுந்த நிலையில், 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதையடுத்து தன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி சப்னா கில் மனு அளித்திருந்தார். இம்மனுவை விசாரித்த மும்பை உயர்நீதிமன்றம், காவல்துறையினருக்கும் பிரித்வி ஷாவிற்கும் இதுகுறித்து நோட்டீஸ் அனுப்பியதுடன் விசாரணையை ஜூன் மாதத்திற்கு தள்ளிவைத்தது.