கேரள மாநிலத்தை சேர்ந்த நடிகை அமலாபால், கடந்த 2010ல் தமிழில் வீரசேகரன் எனும் திரைப்படம் வாயிலாக கதாநாயகியாக அறிமுகமானார். இதையடுத்து சிந்து சமவெளி, மைனா, தெய்வத் திருமகள், தலைவா ஆகிய படங்களில் நடித்தார். அதிலும் குறிப்பாக இவர் தனுஷ் உடன் நடித்த வேலையில்லா பட்டதாரி திரைப்படம் பெரும் வெற்றியடைந்தது.

இப்போது கதாநாயகியாக தனித்து நடித்து வருகிறார். அண்மையில் அவரது “தீ டீச்சர்” படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இதனிடையே இன்ஸ்டாகிராமில் அடிக்கடி புகைப்படங்களை பதிவிடும் அமலாபால், இப்போது மழையில் நனைந்தபடி பூக்களுடன் உள்ள போட்டோவை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.