தமிழகத்திலேயே முதல் முறையாக தூத்துக்குடி மாவட்ட திருநங்கைக்கு கிராம உதவியாளர் பணிக்கான பணி நியமன ஆணையை மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் வழங்கினார். வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பாக கிராம உதவியாளர் பணிக்கான தேர்வு சமீபத்தில் நடந்தது. இந்த தேர்வில் தூத்துக்குடி எட்டயபுரம் பகுதியை சேர்ந்த திருநங்கையான ஸ்ருதி என்பவர் தேர்வானார்.

இதையடுத்து ஸ்ருதிக்கு மாவட்ட கலெக்டர் கி.செந்தில்ராஜ், மேலகரந்தை கிராம உதவியாளர் பணிக்கான நியமன ஆணையினை மாவட்ட கலெக்டர் அலுவலக அலுவலகத்தில் வழங்கினார். இந்த நிகழ்வில் கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ், மாவட்ட வருவாய் அலுவலர் மாரிமுத்து, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் அமுதா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.