தமிழகத்தில் நாளை மறுநாள் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. வெளியூர்களில் உள்ள மக்கள் தங்களுடைய சொந்த ஊர்களுக்கு திரும்புவார்கள். அவர்களுடைய வசதிக்கேற்ப போக்குவரத்துத்துறை சார்பாக பேருந்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டு இயக்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி அனைவரும் பொங்கல் பண்டிகையை கொண்டாட ஏதுவாக தமிழக அரசு பரிசு தொகுப்புகளை வழங்கி வருகிறது.

மேலும் அனைவருக்கும் பொங்கல் தொகுப்பு கிடைக்க வேண்டும் என்னும் நோக்கில் இன்று ரேஷன் கடைகள் திறக்கப்பட்டு அனைவருக்கும் பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. அதற்கு ஈடாக 16ம் தேதி விடுமுறை அளிக்கப்படும் என தெரியவந்துள்ளது.