திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருத்தணி நகராட்சியில் செந்தமிழ் நகர் வடக்கு பகுதியில் சதீஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ஆஷா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு மூன்றாம் வகுப்பு படிக்கும் மகனும், ஒன்றாம் வகுப்பு படிக்கும் மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ஆஷா திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்ற ஆஷாவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் ஆஷா, சதீஷ் தம்பதி திருத்தணியில் இருக்கும் நிதி நிறுவனத்தில் ஒரு லட்ச ரூபாய் கட்டியுள்ளனர். அந்த நிறுவனத்தினர் மாதம் பத்தாயிரம் ரூபாய் வட்டி கொடுக்கப்படும் என கூறியதால் அதிக பணத்தை முதலீடு செய்தனர். ஆனால் அந்த நிறுவனத்தினர் ஆஷா, சதீஷ் தம்பதியினரை ஏமாற்றியதாக தெரிகிறது. இதனால் கடன் சுமை ஏற்பட்டு மன உளைச்சலில் இருந்த ஆஷா தற்கொலை செய்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.