திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருத்தணி நகராட்சியில் வெங்கடேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான மினி பேருந்தை பர்குணன் என்பவர் வளர்புரம் நோக்கி ஓட்டி சென்றார். அந்த பேருந்தில் 22 பயணிகள் இருந்தனர். இந்நிலையில் டி.புதூர் பகுதியில் சென்ற போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து தாறுமாறாக ஓடி கால்வாயில் கவிழ்ந்தது.

இந்த விபத்தில் 5 பெண்கள் உட்பட 10 பேர் படுகாயமடைந்தனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று படுகாயமடைந்த பயணிகளை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.