திருப்பூர் மாவட்டத்தில் உள்ள எரகாம்பட்டியில் விவசாயியான ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் 16 வயது சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் அந்த சிறுமி கர்ப்பமானார். இதனையடுத்து ராஜேந்திரன் தாராபுரம் அரசு மருத்துவமனையில் தலைமை செவிலியராக வேலை பார்க்கும் உஷாராணியிடம் பேசி சிறுமையின் கருவை கலைக்க செய்துள்ளார். மேலும் இதனை வெளியே சொன்னால் கொலை செய்து விடுவேன் எனக் கூறிய ராஜேந்திரன் சிறுமியை மிரட்டியுள்ளார்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமி தாராபுரம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் ராஜேந்திரனையும், உஷாராணியையும் கைது செய்தனர். இதற்கிடையே ராஜேந்திரனின் நண்பரான சரவணன் என்பவர் சிறுமியின் பெற்றோருக்கு கொடுப்பதாக கூறி ராஜேந்திரனிடம் இருந்து 13 லட்சம் ரூபாய் பணத்தை அபகரித்து தலைமறைவாகிவிட்டார். அவரை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் ஒரு வீட்டில் தலைமறைவாக இருந்த சரவணன் போலீசார் சுற்றி வளைத்து கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.