கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மஞ்சதோப்பு பகுதியில் இந்திரா என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இரும்பாலான பெட்டிக்கடை ஒன்றை நடத்தி வந்துள்ளார். சம்பவம் நடைபெற்ற அன்று இந்திரா கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார். மறுநாள் காலை வந்து பார்த்தபோது பெட்டிக்கடை காணாமல் போனதை கண்டு இந்திரா அதிர்ச்சியடைந்தார் இதனால் பதற்றத்துடன் இந்திரா கொல்லங்கோடு காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தார்.

அந்த புகாரில் எனது பெட்டிக்கடையை திருடர்கள் தூக்கி சென்றனர். அதில் ஏழாயிரம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் இருக்கிறது. எனவே பெட்டிக்கடையை கண்டுபிடித்து தர வேண்டும் என புகாரில் குறிப்பிட்டுள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த சினிமா பாணியில் பெட்டிக்கடையை காணவில்லை என கூறுவது உண்மைதானா? கண்காணிப்பு கேமராவில் ஏதாவது காட்சிகள் பதிவாகி இருக்கிறதா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.