சென்னை மாவட்டத்தில் உள்ள தலைமைச் செயலக வளாகத்தில் இருக்கும் ராணுவ சாலையில் நேற்று சொகுசு கார் அதிவேகமாக வந்து ஸ்கூட்டர் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் ஸ்கூட்டரில் வந்த உடற்பயிற்சி கூடத்தின் பயிற்சியாளர்களான சரவணன், நிலா ஆகியோர் அதிர்ஷ்டவசமாக சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். பதற்றத்தில் கார் டிரைவர் சுலைமான் பிரேக்கை அழுத்துவதற்கு பதிலாக ஆக்சிலேட்டரை அழுத்திவிட்டார்.

இதனால் கார் ஸ்கூட்டர் மீது ஏறி நின்றது. அதற்குள் தலைமை செயலகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போலீசார் காயமடைந்த பெண் பயிற்சியாளரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று காரை ஓட்டி வந்து சுலைமான் என்பவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.