திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மணியக்காரன் பாளையம் பகுதியில் சரண்யா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பனியன் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சரண்யா தனது மகளை அரசு பள்ளியில் விட்டு விட்டு வேலைக்காக நடந்து வந்துள்ளார்.

அப்போது பின்னால் வந்த டிராக்டர் கட்டுப்பாட்டை இழந்து சரண்யா மீது மோதியது. இதனால் படுகாயமடைந்த சரண்யா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் அங்கு சென்று சரண்யாவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.