திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பலவஞ்சி பாளையத்தில் மூர்த்தி என்பவருக்கு சொந்தமான பனியன் ஏற்றுமதி நிறுவனம் அமைந்துள்ளது. இங்கு 150-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். நேற்று மாலை தொழிலாளர்கள் வேலை முடிந்து சம்பள பணத்தை வாங்கிக் கொண்டு வெளியேறிக் கொண்டிருந்தனர். அப்போது பனியன் நிறுவனத்தில் தீப்பிடித்து எரிய ஆரம்பித்ததால் தொழிலாளர்கள் அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர்.

இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று மூன்று மணி நேர போராட்டத்திற்கு பிறகு பனியன் நிறுவனத்தில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். ஆனால் இந்த தீ விபத்தில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள பனியன் எந்திரங்கள், மூலப்பொருட்கள் உள்ளிட்டவை எரிந்து நாசமானது. இதுகுறித்து புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.