கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள செங்குட்டை பழங்குடியின கிராமத்தில் மருதன்(65) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது வீட்டில் கால்நடைகளை வளர்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் மருதன் வழக்கம் போல அருகில் இருக்கும் வனப்பகுதிக்கு கால்நடைகளை மேய்ச்சலுக்கு விட்டார். இதனையடுத்து மாலை நேரத்தில் கால்நடைகளை அழைத்து வர சென்ற போது புதர் மறைவில் நின்ற காட்டு யானை மருதனை ஓட ஓட விரட்டியது. அப்போது கால் தவறி கீழே விழுந்த மருதனை யானை மிதித்து கொன்றது.

இதுகுறித்து அறிந்த வனத்துறை என சம்பவ இடத்திற்கு சென்று மருதனின் உடலை மீட்க முயன்றனர். ஆனால் யானை அங்கேயே நின்றதால் அவரது உடலை மீட்கும் பணி கைவிடப்பட்டது. நேற்று காலை யானை அங்கிருந்து சென்ற பிறகு மருதனின் உடல் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.