தென்னிந்திய சினிமாவில் கடந்த 20 வருடங்களாக முன்னணி நடிகையாக கொடிகட்டி பறப்பவர் திரிஷா. இவர் நடிப்பில் கடந்த வருடம் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. நடிகை திரிஷா தற்போது பொன்னியின் செல்வன் 2 மற்றும் லியோ ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். இதில் பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் ஏப்ரல் 28-ல் ரிலீஸ் ஆகிறது. இந்நிலையில் நடிகை திரிஷாவுக்கு டாக்டர் வருண் என்பவருடன் பல வருடங்களுக்கு முன் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. ஆனால் சில காரணங்களால் திருமணம் கேன்சல் ஆகிவிட்டது.

இந்நிலையில் நடிகை திரிஷாவின் தாயார் உஷா சமீபத்திய பேட்டியில் திரிஷாவின் திருமணம் நின்றதற்கான காரணத்தை கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, திரிஷா சினிமாவில் நடிக்கிறார் என்பது தெரிந்துதான் பெண் பார்க்க வந்தார்கள். கல்யாணத்துக்கு பிறகும் நடிக்கலாம் எனக் கூறி வருண் என்கரேஜ் செய்தார். திரிஷாவின் திருமணம் நின்றதில் பெரியவர்கள் பலர் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள். அதுமட்டுமின்றி இன்னும் நிறைய பேர் திருமணம் நின்றதற்கு காரணமாக இருக்கிறார்கள். ஒத்து வராத விஷயங்களை அட்ஜஸ்ட் பண்ணிட்டு வாழ்வது எந்த விதத்திலும் நியாயம் கிடையாது. சில விஷயங்கள் சரிபட்டு வரவில்லை என்றால் பிரிந்து விடுவது தான் சரி. இது போன்ற காரணங்களால் தான் த்ரிஷாவின் திருமணம் நின்றது எனக் கூறியுள்ளார்.