பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகராக திகழ்பவர் சல்மான்கான். இவர் நடிகர் அஜித் நடிப்பில் வெளியான வீரம் படத்தின் ரீமேக்காக ஹிந்தியில் உருவாகியுள்ள கிஸி கா பாய் கிஸி கா ஜான் படத்தில் தற்போது நடித்துள்ளார். இந்த படம் சமீபத்தில் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகியுள்ளது. இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ள நடிகை பலக் திவாரி மற்றும் ஜேஸ்சி கில் ஆகியோர் பட விளம்பரத்திற்கான நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டுள்ளனர். அப்போது நிகழ்ச்சியில் பேசிய பலக் திவாரி நடிகர் சல்மான் கான் கிழிந்த ஷூவை படப்பிடிப்பு தளத்துக்கு அணிந்து வருவார் எனக் கூறி தொகுப்பாளரை அதிர்ச்சி அடைய வைத்தார்.

இது குறித்து சல்மான் கானிடம் கேட்டபோது தன்னிடம் இருக்கும் ஷூக்களில் அதிக சௌகரியமானதாக இந்த கிழிந்த ஷூ தான் இருக்கிறது. அதனால் தான் இதை அணிகிறேன் என்று கூறியுள்ளார். நடிகர் சல்மான் கானுக்கு ஸ்டைலை விட சௌகர்யமாக இருப்பது தான் பிடிக்கும். அவர் எளிமையானவராகவும் மற்றவருக்கு உதவி செய்பவராகவும் திகழ்கிறார். கொடையாளராகவும் இருக்கிறார் என பலக் திவாரி கூறியுள்ளார். மேலும் ரூ. 2800 கோடி சொத்துக்கு அதிபதியான சல்மான் கான் கிழிந்த ஷூவை அணிந்து கொண்டு படப்பிடிப்பு தளத்துக்கு செல்வது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.