பிரபல விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோ நீயா நானா. இந்த ஷோவில் இரண்டு தரப்பினர்களாக போட்டியாளர்கள் கலந்து கொண்டு சமூகத்திற்கு தேவையான அனைத்து விஷயங்களும் இந்த தளத்தில் கலந்துரையாடப்பட்டு பிறகு அந்த நிகழ்ச்சியில் அதற்கான தீர்வுகளும் வழங்கப்படும். மேலும் கோபிநாத் பல உண்மை சம்பவங்களுக்கு சார்பாக இருப்பதால் இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.

இந்த நிலையில் மனைவி இல்லாமல் தனியாக பிள்ளைகளை வளர்க்கும் தந்தையின் கண்ணீருடன் கூடிய அனுபவத்தை இந்த வாரம் நீயா நானாவில் விவாதிக்க பட்டது. அதில் ஒருவர், நான் என்னுடைய குடும்பத்தில் உள்ள கஷ்டங்களை மனநிலையை புரிந்து கொண்டு அதை செய்து முடிக்கும் முன் என்னுடைய வாழ்க்கையானது முடிந்து விட்டது.

என்னுடைய அப்பா அம்மா இருவரையும் பார்த்துக் கொண்டு குழந்தைகளை பார்க்கும் போது தான் அது வாழ்க்கையில் பெரிய டாஸ்க் என்று கூறியிருக்கிறார். அதை தொடர்ந்து அங்கு அமர்ந்துள்ள மகன், என் அப்பா ஐந்து பேர் செய்யும் வேலையை ஒரே ஆளாக செய்வார் என்று கூறி மகிழ்ந்துள்ளார். இந்த வீடியோ காட்சியானது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.