தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் ஜெயம் ரவி. இவர் கடந்த வருடம் நடித்த பொன்னியின் செல்வன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்திற்கு பிறகு நடிகர் ஜெயம் ரவி பொன்னியின் செல்வன் 2, அகிலன், இறைவன், சைரன் போன்ற பல படங்களில் நடித்து வருகிறார். அதன்பிறகு நடிகர் ஜெயம் ரவி கல்யாண் கிருஷ்ணன் இயக்கத்தில் நடித்துள்ள அகிலன் திரைப்படத்தில் பிரியா பவானி சங்கர் மற்றும் தான்யா ரவிச்சந்திரன் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.

இந்நிலையில் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஜெயம் ரவி லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிப்பது குறித்து பேசியுள்ளார். அவர் பேசியதாவது, இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மாநகரம் படத்திற்கு பிறகு என்னிடம் ஒரு கதை சொன்னார். ஆனால் சில காரணங்களால் அந்த படத்தை பண்ண முடியாமல் போனது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் விக்ரம் படத்தின் ஷூட்டிங்கில் இருந்தபோது அகிலன் படத்தின் ஷூட்டிங்கும் அங்கு நடைபெற்றது. அப்போது நானும் லோகேஷ் கனகராஜும் எடுத்துக் கொண்ட புகைப்படம் தான் சோசியல் மீடியாவில் வெளியானது. மேலும் அவர் இயக்கத்தில் நான் நடிக்கவில்லை என்று கூறியுள்ளார்.