கர்நாடக மாநிலத்தில் அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யும் வசதி உள்ளது. இது அந்த மாநிலத்தின் சக்தி திட்டத்தின் கீழ் செயல்படுகிறது. பெண்கள் பயணம் செய்வதற்கு கட்டணம் கிடையாது என்பதால் தினமும் பேருந்துகளில் பெண்களின் எண்ணிக்கை அதிகமாக காணப்படுகிறது.

பெரும்பாலும் சனி, ஞாயிறு போன்ற விடுமுறை தினங்களில் பேருந்துகளில் பயணம் செய்யும் பெண்களின் எண்ணிக்கை அதிகமாக காணப்படுவதால் இருக்கையில் அமர்வதற்காக இடம் பிடிப்பது, பேருந்தில் ஏறும்போது தள்ளுவது போன்ற பல பிரச்சனைகள் தொடர்ந்து நடைபெறுகிறது.

இந்நிலையில் துமகூரு மாவட்டம் பாவகடாவில் உள்ள ஒரு கோவிலில் நேற்று நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக அதிகமான பெண்கள் பேருந்தில் பயணித்தனர். அப்போது பேருந்தில் ஏறுவது தொடர்பாக பெண் பயணிகளுக்கு இடையே தகராறு ஏற்பட்டது.

அதோடு பேருந்தில் இடம் பிடிப்பதற்காக ஏறும்போது பெண்கள் ஒருவருக்கொருவர் தாக்குதலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. மேலும் அந்த சம்பவம் வீடியோவாக சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில் காவல்துறையினர் இது தொடர்பாக வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகிறார்கள்.