கால்பந்து நட்சத்திரம் கிறிஸ்டியன் ரொனால்டோவின் சொத்து மதிப்பை விட 4 மடங்கு சொத்துக்களை குவித்துள்ளார் என்பிஏ ஜாம்பவான் மைக்கேல் ஜோர்டன். ஆறு முறை என்பிஏ பட்டம் வென்றுள்ள மைக்கேல் ஜோர்டன் தொழில் முறையாக பெற்ற மொத்த ஊதியம் ஆனது 74 மில்லியன் பவுண்டுகள் என கூறப்படுகிறது. ஆனால் அவர் ஓய்வை அறிவித்த பின்னர் இவரது சொத்து மதிப்பானது ராக்கெட் வேகத்தில் அதிகரித்துள்ளது.

நிறுவனங்களிடையே ஏற்படுத்திக் கொண்ட ஒப்பந்தத்தின் விளைவாக இவரது சொத்து மதிப்பு 1.5 பில்லியன் பவுண்டுகளாக உயர்ந்தது. ஆனால் ரொனால்டோவின் சொத்து மதிப்பானது 363 மில்லியன் பவுண்டுகள் மட்டுமே. என்பிஏ ஆட்டங்களில் இருந்து ஓய்வு பெற்ற பின்னரும் விளையாட்டின் மீதான தனது ஈடுபாட்டை அவர் குறைத்துக் கொள்ளவில்லை. 2019 ஆம் ஆண்டு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பங்குகளை விற்பனை செய்தார். கூடைப்பந்து அணியின் உரிமையாளராக மட்டுமின்றி 2020 முதல் நாஸ்க்கார் அணி ஒன்றின் உரிமையாளர்களில் ஒருவராகவும் உள்ளார்.