நாம் தமிழர் கட்சி சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், காந்தி திருக்குறளை ஆங்கில பதிப்பில் படித்தி விட்டு, கடைசியா சொல்றாரு….  இன்னொரு பிறப்பு என்று எனக்கு இருக்குமானால் நான் தமிழனாக பிறக்க வேண்டும். அதுக்கு காரணம் இந்த திருக்குறள் எழுதப்பட்ட அதன் தாய் மொழியிலேயே….  ஒரு முறை நான் அதை படிக்க வேண்டும்ன்னு…. நீ  இந்த முறை திருக்குறள் எழுதப்பட்ட தாய் மொழி உன் கையில தான் இருக்கு. ஆனால் படிச்சிருக்கியா ? அப்படிங்கறது தான் கேள்வி…. 

உலகத்தின் ஆகப்பெரிய வேதம்… ஆகப்பெரிய மலை….  மானுட குலத்திற்கு எவரும் மறுக்க முடியாத வேதம்…. எங்கள் தாத்தா தெய்வத்தின் மகன்… எக்காலத்திற்கும்… என்னாட்டவர்க்கும்…. பொருந்தக்கூடிய ஒரு வேதம்… உண்டென்றால்?  அது வள்ளுவ நாயனார்….  திருவள்ளுவ நாயனார் தந்த திருக்குறள் தான்.

ஆல்பர்ட் ஸ்விட்சர் மருத்துவம், பொறியியல், இலக்கியம் இது மூன்றிலும் முனைவர் பட்டம் பெற்ற பெரிய மேதை அவன். அவன்  பிரான்ஸ் நாட்டின் காடுகளில் வேலை செய்யலாம். பழங்குடி மக்களுக்கு தொண்டு செய்யலாம் என்று போரான். அவனை ஒற்றன் என்று கருதி  சிறை  படுத்திடுறாங்க. அவன் புத்தகங்கள் வாசிக்கின்ற பழக்கம் கொண்டவன்., அவன் நண்பர்கள் இடத்திலே புத்தகங்கள் வாங்கி கொண்டு தா என சிறைக்குளே சொல்லுறான்.

அவன் கொண்டு வந்த புத்தகத்தில் ஒரு புத்தகம் கிடைச்சிருக்கு.  அவனுக்கு கொடுத்த புத்தகத்திற்குள் ஒரு புத்தகம் இருக்கு, அது திருக்குறள். அந்த திருக்குறளை  படித்துவிடுகிறான். படிச்சிட்டு அவன் எழுதுறான்…. மூன்று துறைகளில் பட்டம் பெற்றவன்… அவன் என்ன சொன்னான்  பாருங்க.. ? இந்த மாதிரி மானுட வாழ்க்கைக்கு நன்னெறியை போதித்த ஒரு நூலை நான் இதுவரை படித்ததே இல்லை என்கிறான்.

ஆல்பர்ட் ஸ்விட்சர்  படிக்காத வியப்புயில்ல…. நம்மளே படிக்கலைங்குறது தான் பிரச்சனை இங்க. எங்களுடைய தாத்தா தனித்தமிழ் அடிகளார்…. மறைமலை அடிகள் அவர்கள்,  தமிழனுக்கு திருக்குறள் தான்டா வேதமாக இருந்திருக்கணும். அதன்படி நடந்திருந்தால் உலகத்தில் தலை சிறந்த இனமாக தமிழினம் வந்து இருக்கும். நான் புதிதாய் கொள்கைகளை வகுத்து கொள்ளவில்லை என் அன்பு உடன்பிறந்தார்களே…

கொள்கை, கோட்பாடு, நாம் தமிழர் கட்சி அதலாம் ஒன்னும் பேசாதே. என்னடா….  உங்க கொள்கை ? குடிதழீஇக் கோலோச்சும் மாநில மன்னன் அடிதழீஇ நிற்கும் உலகு. அப்படின்னா…  என்ன அர்த்தம்? பெற்ற தாய் குழந்தையின் பசி அறிந்து எந்தெந்த நேரத்தில் பசிக்கும் என்று குறிப்பறிந்து… பாலூட்டி… உணவூட்டி…. எந்தெந்த நேரத்தில் பிள்ளைக்கு உரக்கம் வருமென்று தாலாட்டி…. உறங்க வைப்பாளோ… அப்படி. பெற்ற குழந்தைக்கு தாய் பார்த்து பார்த்து எப்படி சேவை செய்வாளோ….  அப்படி தன் தேசத்தின் குடிகளுக்கு சேவை செய்கிற மன்னனை உலகம் போற்றி தோலும். இதான்டா… அந்த மறையின் பொருள்.

அப்படிப்பட்ட ஆட்சியை வள்ளுவ பெருமகனாரின் வழி நின்று நாம் தமிழர் பிள்ளைகள்… அவன் பேரப்பிள்ளைகள்… பல்லாயிரம் ஆண்டுகள் கடந்து செயல்படுத்தும். முறை செய்து காப்பாற்றும் மன்னவன்…. மக்களுக்கு இறையென்று வைக்கப்படும். இறைவன் என்றால் அரசன் என்றும் பொருள்.தமிழர்களுக்கு கடவுள் கிடையாது உடன் பிறந்தார்களே என தெரிவித்தார்.