உலகின் நம்பர் 1 பணக்காரராக இருந்த எலான் மஸ்க் 13 மாதங்களில் 15 லட்சம் கோடியை இழந்து மோசமான கின்னஸ் சாதனையை படைத்திருப்பது தெரிய வந்துள்ளது. உலகின் நம்பர் ஒன் பணக்காரராக இருந்தவர், ட்விட்டரை விலக்கி வாங்கியவர் டெஸ்லா நிறுவன உரிமையாளர் எலான் மஸ்க் ஆவார். இவரது சொத்து மதிப்பு ரூபாய் 26 லட்சம் கோடியாக 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வரை இருந்தது.

அதன் பின் அவரின் நிர்வாக குளறுபடி தவறான முடிவுகளால் வெறும் 13 மாதங்களில் ரூபாய் 15 லட்சம் கோடியை இழந்திருப்பது தெரியவந்துள்ளது. இதனால் 2023 ஜனவரியில் அவரது சொத்து மதிப்பு ரூபாய் 11 லட்சம் கோடியாக குறைந்துவிட்டது. இதனால் லூயிஸ் நிறுவனர் அர்னால்ட் உலகின் நம்பர் ஒன் பணக்காரர் என்ற இடத்தை பெற்று விட்டார். அதைவிட முக்கியமாக எலான் மஸ்க் தனிப்பட்ட முறையில் மிக அதிகமான சொத்தை குறுகிய காலத்தில் இழந்ததற்காக மோசமான கின்னஸ் உலக சாதனையை பெற்றுள்ளார்.

2021 நவம்பர் முதல் 2023 ஜனவரி வரை அவர் ரூபாய் 15 லட்சம் கோடியை இழந்துள்ளார். இதற்கு முன்பு கடந்த 2000 ஆம் ஆண்டில் ஜப்பான் நாட்டின் தொழில்நுட்ப முதலீட்டாளர் ஒரே ஆண்டில் ரூபாய் 4.8 லட்சம் கோடியை இழந்தது தான் செல்வத்தை இழந்ததில் கின்னஸ் சாதனையாக இருந்தது. அதை தற்போது எலான் மஸ்க் முறியடித்துள்ளார். எலான் மாஸ்க் 13 மாதங்களில் ரூபாய் 15 லட்சம் கோடியை காலி செய்து விட்டார்.