பொதுவாக பாதாம் மரம் மலைப் பகுதிகளில் காணப்படுகின்றது. பாதாம் பருப்பு பலருக்கும் பிடித்தமான உலர் பழங்களில் ஒன்றாகும். பாதாமில் பலவித நன்மைகள் உள்ளன. இது மூளை வளர்ச்சிக்கும் ஞாபக சக்திக்கும் மிகவும் ஏற்றதாக கருதப்படுகின்றது. பாதாமின் நுகர்வு மனித மூளைக்கு ஒரு சஞ்சீவியாக பார்க்கப்படுகின்றது. பாதாம் மரம் பொதுவாக மலைப்பகுதிகளில் அதிகம் காணப்படுகின்றது. ஆசியாவில் ஈரான், ஈராக், மக்கா, சிராஸ் போன்ற இடங்களில் பாதம் மரங்கள் அதிகம் காணப்படுகின்றன.

பாதாமை சரியான முறையில் உட்கொண்டால் உங்களின் மூளையில் நியூரானை செயல்படுத்துவது எளிது. எனினும் சரியான முறையில் பாதாமை உட்கொள்ள வேண்டும். பாதாம் பருப்பை முறையாக உட்கொள்வது பற்றிய முழுமையான தகவலை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். பாதாம் பருப்பை தோலுடன் சேர்த்து சாப்பிடக்கூடாது. பெரும்பாலும் பலர் அவசரம் காரணமாக உலர் பாதாம் பருப்பை அப்படியே உட்கொள்ள தொடங்குகிறார்கள்.

இப்படி செய்வதன் மூலம் பித்தத்தின் சமநிலையின்மை அதிகரிக்க தொடங்குகின்றது. இதனால் நோய்களுக்கு ஆளாக நேரிடும். எனவே தோலுடன் பாதாமை உட்கொள்வதை தவிர்க்கவும் என தகவல் வெளியாகி உள்ளது. தோலுடன் பாதாமை சாப்பிடுவதால் அதன் சில துகள்கள் உங்கள் குடலில் சிக்கிக் கொள்ளும். இதன் காரணமாக வயிற்று வலி, எரிச்சல், வாயு உருவாவதற்கு வாய்ப்புள்ளது. எனவே பாதாமை தோல் நீக்கி சாப்பிடுவது தான் நல்லது.