விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்பதற்கு ஏற்ப மிட்டாய் மரம் வளர்க்க ஆசைப்படும் ஒரு சிறுமியின் மழலை மாறாத காணொளி தற்போது சமூக வலைதளங்களில் பலரது கவனத்தை ஈர்த்து வைரலாகி வருகிறது. குழந்தைகளின் கற்பனைத் திறனுக்கு எல்லைகள் கிடையாது என்பதை மெய்ப்பிக்கும் வகையில் அந்தச் சிறுமி மண்ணில் மிட்டாய்களை நட்டு வைத்து அவை மரமாக வளரும் என்று நம்பிக்கையுடன் கூறுகிறார்.

 

 

View this post on Instagram

 

A post shared by Growing Vartika (@growing_vartika)

செடி வளர்வதற்காகத் தினமும் அந்த இடத்திற்குத் தண்ணீர் ஊற்றுவேன் என்று அந்தச் சிறுமி கூறும் வெள்ளந்தியான பேச்சு இணையவாசிகளை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சுமார் இருபது லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ள இந்தக் காணொளியைப் பார்த்த பலரும் தங்களது சிறுவயது ஞாபகங்களைப் பகிர்ந்து வருவதுடன் அந்தச் சிறுமியின் நம்பிக்கையைப் பாராட்டி இதயக் குறிகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

மிட்டாய் மரம் வளராது என்ற எதார்த்தமான உண்மை தெரியாமல் அந்தச் சிறுமி காட்டும் அதீத ஆர்வம் குழந்தைகளின் உலகம் எவ்வளவு அழகானது என்பதை உலகுக்கு உணர்த்தும் வகையில் அமைந்துள்ளது.