ஏமன் நாட்டில் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் அரசு படைகளுக்கும் இடையே உள்நாட்டு போர் நடந்து வருகின்றது. ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு ஈரானும் ஏமன் நாட்டு அரசு படைகளுக்கு சவுதி படைகளும் ஆதரவளிக்கின்றது.

இந்நிலையில் ஈரான் நாட்டில் இருந்து ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்காக கொண்டு செல்லப்பட்ட எந்திர துப்பாக்கிகள் மற்றும் பீரங்கி எதிர்ப்பு ஏவுகணைகளை ஓமன் வளைகுடா அருகில் பிரான்ஸ் கடற்படை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

இதனை முதலில் ஈரான் அரசு ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் அமெரிக்க ராணுவத்தின் உடைய மத்திய கட்டளையால் வெளியிடப்பட்ட ஆயுதங்களின் படங்கள் பிரான்ஸ் படைகளால் கைப்பற்றப்பட்ட ஆயுதங்களை போன்றே இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

முன்னதாக உக்ரைன் ரஷ்யா போரில் ரஷ்யாவிற்கு ட்ரோன்களை அனுப்புவது தொடர்பான விவகாரத்தில் மேற்கத்திய நாடுகளின் அழுத்தத்தை ஈரான் தற்போது வரை எதிர்கொண்டு வருகின்றது.

இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் இந்த ஆயுத கைப்பற்றல் உலக நாடுகளை அதிர வைத்துள்ளது. குறிப்பாக ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்கள் அனுப்புவதை ஐநா சபை தீர்மானம் தடை செய்தது.