தமிழ் சினிமாவில் பிரபலமான குணச்சித்திர நடிகையாக இருப்பவர் ஜீவிதா. இவர் தற்போது நடிகை சகிலாவுடன் சேர்ந்து தனியார் youtube சேனல் ஒன்றுக்கு கொடுத்த பேட்டி வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அந்த பேட்டியில் நடிகை ஜீவிதா கூறியதாவது, நான் சினிமாவுக்கு வந்த புதிதில் வாய்ப்பு தருவதாக கூறி பலரும் அட்ஜஸ்ட்மென்ட் கேட்டார்கள். இயக்குனர் ஒருவர் எனக்கு செல்போன் மூலம் தொடர்பு கொண்டு படத்தில் நீங்கதான் ஹீரோயின் என்று கூறினார். அவரின் அலுவலகம் பாலு மகேந்திராவின் அலுவலகம் பக்கத்தில் இருப்பதாக என்னிடம் கூறினார். நான் அலுவலகத்திற்கு சென்ற போது படத்தில் நீங்க இரண்டாவது ஹீரோயின். முதல் ஹீரோயினாக பிரபலமான நடிகை ஒருவர் நடிக்கிறார் என்று கூறினார்.

இனி நீங்கதான் அட்ஜஸ்ட்மெண்ட் குறித்து சொல்ல வேண்டும் என கூறினார். நான் அவரிடம் அட்ஜஸ்ட்மென்ட் என்றால் என்ன என்று கேட்டேன். அதற்கு இயக்குனர் நான் உட்பட, படத்தின் கேமராமேன் மற்றும் மேனேஜர் ஆகியோரையும் அட்ஜஸ்ட் செய்ய வேண்டும். நாங்க எப்ப வேண்டுமானாலும் ரூமுக்கு வந்துட்டு போவோம் என்று கூறினார். இது தஞ்சாவூர் பக்கத்துல 15 நாள் நடக்கும். இதுக்கு சம்மதம் அப்டின்னா படத்துல நடிக்கலாம் என்று கூறினார். இதைக் கேட்டவுடன் எனக்கு அழுகையாக வந்தது. ஆனால் அவர்கள் முன்பு அழக்கூடாது என்பதற்காக நான் யோசித்து சொல்கிறேன் என்று கூறிவிட்டு அங்கிருந்து வந்து விட்டேன் என்று கூறியுள்ளார். மேலும் நடிகை ஜீவிதா கண்ணீர் மல்க இந்த தகவலை கூறியுள்ளது தற்போது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.