தெலுங்கு சினிமாவின் மெகா ஸ்டார் சிரஞ்சீவி. இவருடைய தம்பி நாக பாபுவின் மகள் நிஹாரிகா. இவர் தமிழில் நடிகர் விஜய் சேதுபதியுடன் சேர்ந்து ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார். தெலுங்கில் 5 படங்களில் மட்டுமே நடித்த நிஹாரிக்காவுக்கு கடந்த 2020-ம் ஆண்டு குண்டூர் ஐஜியின் மகன் சைதன்யாவுடன் திருமணம் நடைபெற்றது. இவர் இன்ஜினியராக இருக்கிறார்.

கடந்த சில நாட்களாகவே சைதன்யா மற்றும் நிஹாரிகா பிரிந்து விட்டதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியானது. இந்நிலையில் தற்போது சைதன்யா மற்றும் நிஹாரிகா இன்ஸ்டாகிராமில் ஒருவருக்கொருவர் பாலோ செய்வதை நிறுத்திவிட்டனர். அதன்பிறகு சைதன்யா தன் வலைதள பக்கத்தில் இருந்த திருமண புகைப்படங்களையும் நீக்கியுள்ளார். ஆனால் நிஹாரிகா தன் திருமண புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை நீக்கவில்லை. மேலும் இதனால் தான் தற்போது  நிஹாரிகா மற்றும் சைதன்யா பிரிந்து விட்டதாக தகவல்கள் பரவுகிறது.