உத்தரப்பிரதேச மாநிலத்தின் காசியாபாத்தில் கர்வா சௌத் பண்டிகையை முன்னிட்டு நடந்த கொடூர சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. கோட்வாலி நகர் பகுதியில் மெஹந்தி இட சென்ற பெண் மற்றும் அவரது கணவர், மகன் ஆகியோர் மீது, இருசக்கர வாகனத்தின் ஹெட்லைட் விவகாரத்தை தொடர்ந்து, மூன்று பேர் கொண்ட குழுவினர் தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவம் காணொளியாக பதிவாகி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
#गाजियाबाद:करवा चौथ की खरीदारी के बीच बाजार में मारपीट की घटना,महिला समेत परिवार पर हमला
> गाजियाबाद मे करवा चौथ की रौनक के बीच घंटाघर स्थित चौपला मंदिर के पास देर शाम उस समय हंगामा मच गया जब मेहंदी लगवाने आई एक महिला के साथ उसके पति और बेटे पर दबंगों ने हमला कर दिया
> बताया जा… pic.twitter.com/a7MNPESEV7
— NEWSNOWLIVE (@newsnowlivee) October 10, 2025
பொதுமக்கள் அளித்த தகவலின்படி, வாகனத்தின் லைட் நேராக பெண்மணி கண்களில் விழுந்ததையடுத்து, அவர் அதனை அணைக்குமாறு கேட்டுள்ளார். ஆனால், சந்தேகத்திற்கிடமான நபர் அதை அலட்சியம் செய்ததாக தெரிவிக்கப்படுகிறது. அதையடுத்து பெண்ணின் கணவர் நேரில் சென்று லைட்டை அணைத்த போது, வாக்குவாதம் வன்முறையாக மாறி, தாக்குதலாகவும் அமைந்தது. இதில் பெண் மற்றும் அவரது குடும்பத்தினர் காயம் அடைந்தனர்.
போலீசார் ஒருவரை கைது செய்துள்ளனர். மீதமுள்ள இருவரை பிடிக்கும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடைபெற்று வருகிறது. கர்வா சௌத் பண்டிகையை கொண்டாட வந்த குடும்பத்திற்கு, ஒரு மோட்டார்சைக்கிள் லைட் சம்பவம் கடுமையான வன்முறையை ஏற்படுத்தியுள்ளது.
