கனடா நாட்டில் ரொரன்றோ பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தம்பதியினர் வசித்து வந்தனர். இந்த தம்பதியினர் வேலை காரணமாக கடந்த ஆண்டு ஜனவரி மாதம் வெளிநாடுக்கு சென்றுள்ளனர். இந்த நிலையில் அவர்கள் தற்போது தங்களின் சொந்த நாட்டிற்கு திரும்பி உள்ளனர். ஆனால் அங்குள்ள அவர்களின் வீட்டை யாரோ யாருக்கோ விற்றுள்ளதை அறிந்து மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது குறித்து அவர்கள் உடனடியாக போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர்.

இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த தொடங்கியுள்ளனர். குறிப்பாக இந்த மோசடியில் சிக்கியது இவர்கள் மட்டுமல்ல. இதே போன்று அப்பகுதியில் உள்ள பல பேர் ஏமாற்றப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இது குறித்து போலீசார் கூறியதாவது “இந்த புகாரினால் நாங்கள் மிகவும் குழப்பம் அடைந்துள்ளோம். மற்றவர்கள் தங்களின் வீடுகளை சரியான முறையில் பாதுகாத்து கொள்ள வேண்டும்” என்று கூறியுள்ளனர்.