அதி கனமழை காரணமாக இன்று தமிழகத்தில் நான்கு மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்திருக்கிறது. தென் மாவட்டங்களான கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களுக்கு அதிதீவிர கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நேற்று முதல் பெய்து வரும் கனமழையால் தென் மாவட்டங்கள் திணறிவரும் நிலையில் நாளையும் அந்த நான்கு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது