கமல்ஹாசன் நடித்து சென்ற ஆண்டு ஜூன் மாதம் வெளியாகிய “விக்ரம்” திரைப்படம் வசூல் சாதனை நிகழ்த்தியது. இப்போது இந்தியன் திரைப்படத்தின் 2-ஆம் பாகத்தில் கமல் நடித்து வருகிறார். இப்படத்துக்கு பின் மணிரத்னம் இயக்கும் திரைப்படத்தில் கமல் நடிக்க உள்ளதாக அறிவித்துள்ளனர். கமல் மற்றும் மணிரத்னம் கூட்டணியில் கடந்த 1987ல் வெளியாகிய நாயகன் திரைப்படம் பெரிய வெற்றிபெற்றது.

36 வருடங்களுக்கு பின் தற்போது மீண்டுமாக புது படத்தில் இணைந்துள்ளனர். இந்த திரைப்படத்தை அதிக செலவில் தயாரிக்கவும் இந்திய திரையுலகில் இதுவரை இல்லாத அளவுக்கு அனைத்து மொழிகளில் இருந்து முன்னணி நடிகர்களை நடிக்க வைக்கவும் திட்டமிட்டுள்ளனர். அதன்படி மலையாள நடிகர் மம்முட்டி, இந்தி நடிகர் ஷாருக்கான் போன்றோரை நடிக்க வைக்க முடிவுசெய்து இருப்பதாகவும், அவர்களிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையில் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் 2 ஆம் பாகம் ஏப்ரல் 28-ஆம் தேதி வெளியாக உள்ளது. அதனை தொடர்ந்து அவரது அடுத்தக்கட்ட படப்பிடிப்பு தொடங்கப்படும்.