மாவீரன் திரைப்படத்தில் விஜய் சேதுபதி குரல் கொடுத்த நெகிழ்ச்சியான சம்பவம் குறித்து இயக்குனர் மடோன் அஸ்வின் நேர்காணல் ஒன்றில் பகிர்ந்துள்ளார்.
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான மாவீரன் திரைப்படம் பெரிய அளவில் வரவேற்பை பெற்ற நிலையில், பட பிடிப்பு நிகழ்ந்த போது நடந்த நெகிழ்ச்சியான சம்பவங்கள் குறித்து படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வின் பல நேர்காணல்களில் தொடர்ந்து பல தகவல்களை அளித்து வருகிறார். அந்த வகையில்,
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மாவீரன் திரைப்படத்தில் வாய்ஸ் ஓவர் கொடுத்திருப்பது குறித்து இயக்குனர் மடோன் அஸ்வின் கூறியிருப்பதாவது, மாவீரன் திரைப்படத்தில் கதாநாயகனுக்கு கதை சொல்லும் பாத்திரத்திற்கு குரல் கொடுத்ததற்காக ஒரு ரூபாய் பணம் கூட அவர் வாங்கவில்லை.
சினிமா துறையில் இவ்வகையான வித்தியாசமான போக்கை நான் செய்வது இதுவே முதல் முறை. இதற்கு பணம் வாங்குவது சரியாக இருக்காது. மேலும் என் நண்பன் சிவகார்த்திகேயனுக்காக இதை செய்வதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் என தெரிவித்ததாக படத்தின் இயக்குனர் கூறியிருந்தார்.