80s-களில் தமிழ் திரையுலகில் ஹீரோயினியாக வலம் வந்தவர் நடிகை ரேகா. பாரதிராஜாவின் கடலோர கவிதைகள் திரைப்படம் வாயிலாக ஹீரோயினியாக அறிமுகமான இவர், பின் பல்வேறு முக்கியமான படங்களில் நடித்தார். இதையடுத்து ரேகா பல ஆண்டுகளுக்கு பின் பிக்பாஸ் சீசன் 4ல் போட்டியாளராக பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதன்பின் விஜய் டிவி சீரியல்கள் மற்றும் ஷோக்களில் அவர் நடித்து வருகிறார். இப்போது ரேகா UK-வில் அவரது சகோதரியின் தோழி வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கு அவரது வீட்டை வீடியோ எடுத்து ரேகா யூடியூப் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். வீட்டின் பாத்ரூமிலேயே படுத்து விடலாம், அப்படி இருக்கிறது என அதில் அவர் கூறி உள்ளார். அதோடு வீட்டிலேயே ஆப்பிள் மரம் இருக்கிறது என அவர் வீடியோவில் காட்டி இருக்கிறார்.