கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூரில் இருந்து அரசு பேருந்து சேலம் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாலக்கோடு பேருந்து நிலையத்திற்கு காலை 11 மணிக்கு பேருந்து வந்தது. இந்நிலையில் இன்ஜின் கீழ் பகுதியில் திடீரென தீ பிடித்து எரிய ஆரம்பித்ததை பார்த்த டிரைவர் உடனடியாக இன்ஜினை ஆஃப் செய்து தண்ணீரை ஊற்றி அணைத்தார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.