சேலம் மாவட்டத்தில் உள்ள முத்து நாயக்கன்பட்டி ஊராட்சி நான்காவது வார்டு பகுதியில் கடந்த ஒரு வாரமாக பொது மக்களுக்கு சீரான முறையில் குடிநீர் விநியோகம் செய்யவில்லை. இதனால் கோபமடைந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கூட்டுறவு சங்கம் முன்பு திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சீராக குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். அதன் பிறகு பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.