நடிகர் விஜய் தனது அரசியல் பயணம் குறித்து விவாதிக்க விரைவில் இயக்கத்தை சேர்ந்த முக்கிய மாவட்ட  பொறுப்பாளர்களுடன் சந்திப்பை ஏற்படுத்தப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான நடிகர் விஜய் லியோ படத்தில் முழுவதுமாக நடித்து முடித்து விட்டார். இந்நிலையில் இவரது அடுத்த கட்ட நகர்வு தளபதி 68, அதன் பின்பு சினிமாவில் நீண்ட இடைவெளி எடுக்கப் போவதாகவும், அரசியலில் ஈடுபடுவது குறித்து தீவிர ஆலோசனையில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.

ஆனால் இதற்கு நடிகர் விஜய் தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வமாக பதில்கள் எதுவும் கிடைக்கப்பெறவில்லை.  இந்நிலையில் நடிகர் விஜய், இயக்கத்தை சேர்ந்த முக்கிய மாவட்ட பொறுப்பாளர்களை விரைவில் பனையூரில் உள்ள தனது இல்லத்தில்  சந்திக்க இருப்பதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

ஏற்கனவே இது போன்ற கூட்டங்கள் அவ்வபோது நடைபெற அதில் விஜய் கலந்து கொண்டு பல முக்கிய முடிவுகளை செயல்படுத்துமாறு இயக்க நண்பர்களை அறிவுறுத்தியுள்ளார்.  அதன் படி கடந்த மாதம் 28ஆம் தேதி உலக பட்டினநாளில்  தமிழகம் முழுவதும் இலவசமாக உணவு என்பது ஆதரவற்றோருக்கு விஜய் இயக்க நண்பர்களால் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.