கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன்  கோவை ரங்கநாதபுரம் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில்துளிர் என்ற திட்டத்தை தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து  பேசிய அவர், ”நானும் அண்ணாமலையும் அக்காவும், தம்பியுமாக பாஜகவை வளர்க்கின்றோம். எனக்கும் அண்ணாமலைக்கும் எந்த பிரச்னையும் கிடையாது.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கல்யாண மேடைகளை, எதிர்கட்சிகளை திட்ட பயன்படுத்திக் கொள்கிறார். பிரதமர் மோடியின் மீது விமர்சனம் வைத்ததுடன், தனது ஆட்சிக்கு ஆபத்து வந்தாலும் பரவாயில்லை என்றும் சொல்லி இருக்கிறார். அவருக்கு எதற்காக இந்த பயம் வந்திருக்கிறது என்பது தெரியவில்லை” என்றார்.