தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலமாக அரசு சிறை மற்றும் சீர்திருத்த பணிகள் துறையில் காலியாக உள்ள உதவி ஜெயிலர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. மொத்தம் 59 பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டி தேர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் இதற்கான குறைந்தபட்ச கல்வி தகுதி பட்டப்படிப்பு தேர்ச்சி எனவும் அறிவிக்கப்பட்டது.

இதற்கான விண்ணப்பதிவு மே 11ஆம் தேதி முதல் தொடங்கிய நிலையில் எழுத்து தேர்வு ஜூலை 1ஆம் தேதி நடைபெற்றது. இந்நிலையில் தற்போது உதவி ஜெயிலர் பணியிடங்களுக்கு நடத்தப்பட்ட தேர்வுக்கான விடை குறைப்பு வெளியிடப்பட்டுள்ளதாக tnpsc தேர்வாணையம் அறிவித்துள்ளது. இந்த விடை குறிப்பை தேர்வர்கள் www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.