மதுரை மாவட்டத்திலுள்ள டி.வி.எஸ் நகர் மின்வாரிய அலுவலகத்தில் தாணுமூர்த்தி என்பவர் இளநிலை பொறியாளராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் தாணுமூர்த்தி வேலை நேரத்தில் மது அருந்தியதாக வீடியோ வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து மதுரை மேற்கு மின் பகிர்மான வட்ட செயல் பொறியாளர் லதா விசாரணை நடத்தியுள்ளார். அப்போது தாணு மூர்த்தியும் மற்றொரு அலுவலரும் மது அருந்தியது உறுதியானது. இதனால் இதுவரையும் பணியிடை நீக்கம் செய்து உயர் அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்தனர்.