ஜார்க்கண்ட் கோடா மாவட்டம் உர்ஜா நகரில் ஆங்கிலவழி பள்ளிக்கூடம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 17 வயது மாணவன் படித்து வருகிறார். அந்த மாணவனும் அதே வகுப்பில் பயிலும் மாணவியும் காதலித்து வந்து உள்ளனர். இதற்கிடையில் அந்த மாணவி தன் இன்ஸ்டாகிராமில் வெறொரு இளைஞருடன் பேசி வந்துள்ளார். இதை அறிந்த மாணவன் ஆத்திரத்தில் தான் மறைத்து வைத்திருந்த இரும்பு கம்பியால் காதலியை சரமாரியாக தாக்கினார்.

இதனால் அந்த மாணவி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து புகாரின் படி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், கொலை செய்த 17 வயது மாணவனை கைது செய்தனர். அதன்பின் மாணவன் தான் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டதால் அவன் சிறையில் அடைக்கப்பட்டான்.