ஊழியரின் PF கணக்கில் மாதந்தோறும்  நிறுவனம் ஒரு குறிப்பிட்ட தொகையினை செலுத்தி வருகிறது. இதேபோன்று ஊழியர் ஒருவரும் தன் சம்பளத்தில் குறிப்பிட்ட தொகையினை PF கணக்கில் செலுத்துகிறார். இந்த இரண்டும் சேர்ந்ததுதான் ஓய்வூதிய கார்பஸாக செயல்படுகிறது. இந்த ஓய்வூதிய கார்பஸ் தொகையானது பணியாளர் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின் கிடைக்கும்.

இந்நிலையில் ஊழியர்களின் PF வட்டி குறித்த முக்கிய அறிவிப்பை EPFO வெளியிட்டுள்ளது. நடப்பு நிதியாண்டு முடிவடைந்தாலும், சில கணக்குகளில் கடந்த ஆண்டு வட்டி வரவு வைக்கப்படவில்லை. PF கணக்கு வைத்திருப்பவர்கள் இதை விமர்சித்து வரும் நிலையில், விரைவில் கணக்கில் வட்டி வரவு வைக்கப்படும். பணம் செலுத்தும் செயல்முறை தொடரும் என EPFO டுவிட் செய்துள்ளது. இதன் மூலம் வட்டி முழுமையாக வழங்கப்படும் என தெளிவுபடுத்தபட்டுள்ளது.