நாடு முழுவதும் மக்களுக்கு அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாகிய சமையல் எரிவாயுவின் விலையானது அதிகரித்துகொண்டே செல்கிறது. இந்நிலையில் இந்தியாவின் அமைச்சரவையானது ஒரு எரிவாயு குழு அறிக்கையை ஏற்கவுள்ளது. அந்த வகையில் ஏப்ரல் மாதம் முதல் உள்ளூர் எரிவாயுக்குரிய விலை ஒரு மில்லியன் பிரிட்டிஷ் வெப்ப அலகுகளுக்கு (mmBtu) $6.50 ஆக நிர்ணயிக்க பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது. கடந்த வருடம் எரிசக்தி நிபுணர் கிரிட் பரிக் தலைமையிலான குழுவை இந்தியா அமைத்தது.

அக்குழு நுகர்வோருக்கு நியாயமான விலையை உறுதிசெய்ய வேண்டும் என்பதற்காக இந்தியாவின் எரிவாயு விலை சூத்திரத்தை மறு பரிசீலனை செய்தது. அந்த அடிப்படையில் பழைய பிளாக்குகளில் இருந்து தயாரிக்கப்படும் எரிவாயுவின் மாதாந்திர விலையானது இந்திய கச்சா கூடையின் மாதாந்திர சராசரியில் 10% ஆக நிர்ணயிக்கப்பட வேண்டும் என்றும் இதன் உச்ச வரம்பு $6.5/mmBtu மற்றும் $4/mmBtu என இருக்கவேண்டும் என்றும் குழு பரிந்துரை செய்து உள்ளது. பழைய தொகுதிகளிலிருந்து எரிவாயுவின் இப்போதைய விலையானது $8.57-ஆக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இது மார்ச் வரை இருக்கும் என்றும் ஏப்ரல் மாதம் முதல் விலை குறையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.