மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு வருகிற ஏப்ரல் 4-ஆம் தேதியன்று சென்னையில் டாஸ்மாக் கடை, பார்களை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனினும் விதியை மீறி 4-ஆம் தேதி மது விற்பனை நடந்தால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இது தொடர்பாக சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலகம் சார்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் இருப்பதாவது, “வரும் ஏப்ரல் 4-ஆம் தேதி மகாவீர் ஜெயந்தி தினத்தையொட்டி சென்னை மாவட்டத்திலுள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான கடைகள் மற்றும் அதனை சார்ந்த பார்கள், ஓட்டல்களைச் சார்ந்த பார்கள் அனைத்தும் கண்டிப்பாக மூடவேண்டும். இதை தவறினால் மதுபான விற்பனை விதிமுறைகளின் படி கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.