மே 12 கிரிகோரியன் ஆண்டின் 132 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 133 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 233 நாட்கள் உள்ளன.

இன்றைய தின நிகழ்வுகள்

254 – முதலாம் ஸ்தேவான் 23-வது திருத்தந்தையாகப் பதவியேற்றார்.

907 – சீனாவில் முன்னூறு ஆண்டு கால ஆட்சியின் பின்னர் தாங் அரசமரபு ஆட்சி இழந்தது.

1191 – இங்கிலாந்தின் முதலாம் ரிச்சார்ட் சைப்பிரசில் பெரங்காரியா என்பவரைத் திருமணம் புரிந்தார்.

1551 – அமெரிக்காக்களின் மிகப் பழமையான பல்கலைக்கழகம், சான் மார்க்கோசு தேசியப் பல்கலைக்கழகம், பெரு, லிமா நகரில் அமைக்கப்பட்டது.

1588 – சமயங்களுக்கான பிரெஞ்சுப் போர்: முதலாம் என்றி பாரிசு நகரை அடைந்து, கிளர்ச்சி ஆரம்பித்ததை அடுத்து பிரான்சின் மூன்றாம் என்றி மன்னர் பாரிசில் இருந்து வெளியேறினார்.

1780 – அமெரிக்கப் புரட்சிப் போர்: தென் கரொலைனாவின் சார்ல்ஸ்டன் நகரத்தை பிரித்தானியப் படை கைப்பற்றியது. அமெரிக்க விடுதலைப் படையின் மிகப்பெரும் தோல்வியாக இது கருதப்படுகிறது.

1784 – செப்டம்பர் 3 இல் எழுதப்பட்ட பாரிசு உடன்படிக்கை அமுலுக்கு வந்தது.

1797 – பிரான்சின் முதலாம் நெப்போலியன் இத்தாலியின் வெனிசு நகரைக் கைப்பற்றினான்.

1821 – கிரேக்க விடுதலைப் போருக்கான முதல் சமர் வால்தெத்சி நகரில் துருக்கியருக்கு எதிராக இடம்பெற்றது.

1862 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: அமெரிக்கப் படைகள் பாடன் ரூச்சைக் கைப்பற்றின

1864 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: வேர்ஜீனியாவில் ஸ்பொட்சில்வேனியா என்ற இடத்தில் இடம்பெற்ற சமரில் ஆயிரக்கணக்கான கூட்டமைப்பு மற்றும் கூட்டணி படையினர் இறந்தனர்.

1881 – துனீசியா பிரான்சின் நேரடி ஆட்சியின் கீழ் வந்தது.

1888 – தென்கிழக்காசியாவில், வடக்கு போர்னியோ பிரித்தானியாவின் நேரடி ஆட்சியின் கீழ் வந்தது.

1922 – 20 தொன் விண்கல் வேர்ஜீனியாவில் வீழ்ந்தது.

1926 – இத்தாலியில் தயாரிக்கப்பட்ட நோர்ச் வான்கப்பல் வட முனைக்கு மேலாகச் சென்ற முதலாவது வானூர்தி ஆகும்.

1937 – ஆறாம் ஜோர்ஜ், எலிசபெத் மகாராணி பிரித்தானியாவின் ஆட்சியாளர்களாக முடிசூடினர்.

1941 – உலகின் முதலாவது நிரலொழுங்கு, தானியங்கிக் கணினி Z3 அறிமுகப்படுத்தப்பட்டது.

1942 – இரண்டாம் உலகப் போர்: அமெரிக்க எண்ணெய்க் கப்பல் வர்ஜீனியா மிசிசிப்பி ஆற்றில் செருமானிய யூ-507 நீர்மூழ்கியினால் தாக்கி மூழ்கடிக்கப்பட்டது.

1949 – பனிப்போர்: சோவியத் ஒன்றியம் பெர்லின் மீதான முற்றுகையை நிறுத்தியது.

1965 – சோவியத் ஒன்றியத்தின் லூனா 5 விண்கலம் சந்திரனில் மோதியது.

1978 – சாயிரில், கொல்வேசி நகரைத் தீவிரவாதிகள் கைப்பற்றினர்.

1981 – ஐரியக் குடியரசுப் படையைச் சேர்ந்த தன்னார்வலர் பிரான்சிசு இயூசு சிறையில் உண்ணாநோன்பிருந்து இறந்தார்.

1982 – போர்த்துகலில் திருத்தந்தை இரண்டாவது ஜோன் போலைக் கொலை செய்ய எடுக்கப்பட்ட முயற்சி தோல்வியடைந்தது.

1998 – இந்தோனேசியாவில் திரிசக்தி பல்கலைக்கழகத்தில் நான்கு மாணவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதனை அடுத்து அங்கு கலவரங்கள் ஆரம்பமாயின.

2002 – முன்னாள் அமெரிக்க அரசுத்தலைவர் ஜிம்மி கார்ட்டர் கியூபாவுக்கு ஐந்து-நாள் பயணம் மேற்கொண்டு கியூபா வந்தார்.

2003 – ரியாத் நகரில் அல் காயிதா மேற்கொண்ட தாக்குதல்களில் 26 பேர் கொல்லப்பட்டனர்.

2006 – பிரேசில், சாவோ பாவுலோ நகரில் மக்கள் ஆர்ப்பாட்டத்தின் போது 150 பேர் உயிரிழந்தனர்.

2008 – சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் 8.0 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில் 69,000 பேர் உயிரிழந்தனர்.

2010 – லிபியாவின் திரிப்பொலி பன்னாட்டு விமான நிலையத்துக்கருகில் விமானம் ஒன்று வீழ்ந்ததில் 103 பேர் உயிரிழந்தனர், ஒருவர் உயிர் தப்பினார்.

2015 – நேபாளத்தில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 218 பேர் உயிரிழந்தனர்.

2017 – பணயத் தீநிரல் உலக அளவில் ஏறத்தாழ 400 ஆயிரம் கணினிகளைத் தாக்கியது.

இன்றைய தின பிறப்புகள்

1820 – புளோரன்ஸ் நைட்டிங்கேல், இத்தாலிய-ஆங்கிலேய செவிலி, சமூக நீர்த்திருத்தவாதி (இ. 1910)

1828 – டேன்டி கெய்பிரியல் ரோசட்டி, ஆங்கிலேயக் கவிஞர், ஓவியர் (இ. 1882)

1843 – தாமஸ் வில்லியம் ரைஸ் டேவிட்ஸ், பிரித்தானிய பாளி அறிஞர் (இ. 1922)

1866 – லியோபோல்டு மேன்டிக், கப்புச்சின் சபையை சேர்ந்த குரோவாசிய கத்தோலிக்க அருட்பணியாளர் (இ. 1942)

1891 – வெ. துரையனார், தென்னாப்பிரிக்க-இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர் (இ. 1973)

1895 – ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி, இந்திய-அமெரிக்க மெய்யியலாளர் (இ. 1986)

1899 – இந்திரா தேவி, லாத்விய யோகா நிபுணர் (இ. 2002)

1905 – அல்பர்ட் பீரிசு, இலங்கையின் நாடாளுமன்ற சபாநாயகர் (இ. 1967)

1910 – டோரதி ஓட்ச்கின், நோபல் பரிசு பெற்ற ஆங்கிலேய உயிரிவேதியியலாளர் (இ. 1994)

1912 – மாயவரம் வி. ஆர். கோவிந்தராஜ பிள்ளை, தமிழக கருநாடக வயலின் இசைக் கலைஞர் (இ: 1979)

1913 – தாத்தேயசு அகேகியான், ஆர்மேனிய-சோவியத் வானியற்பியலாளர் (இ. 2006)

1917 – பாக்கீர் மாக்கார், இலங்கை அரசியல்வாதி (இ. 1997)

1924 – சேக் சின்ன மௌலானா, தமிழக நாதசுவரக் கலைஞர் (இ. 1999)

1926 – எம். எஸ். எஸ். பாக்கியம், தென்னிந்தியத் திரைப்பட, நாடக நடிகை

1932 – டெரிக் மால்கம், பிரித்தானிய திரைப்பட விமரிசகர்

1942 – பான் இயூ தெங், மலேசிய மனித உரிமை போராளி (இ. 2010)

1947 – மைக்கல் இக்னேட்டியஃவ், கனடிய அரசியல்வாதி

1952 – ப. ரங்கராஜன் குமாரமங்கலம், இந்திய அரசியல்வாதி (இ. 2000)

1954 – எடப்பாடி க. பழனிசாமி, தமிழகத்தின் 8-வது முதலமைச்சர்

1955 – கரு. அழ. குணசேகரன், தமிழக எழுத்தாளர், இலக்கிய ஆர்வலர், பாடகர் (இ. 2016)

1962 – எமிலியோ எஸ்டீவ்ஸ், அமெரிக்க நடிகர்

1964 – பிரரே மோறேல், பிரெஞ்சு இயக்குநர், ஒளிப்படவியலாளர்

1977 – மரியாம் மீர்சாக்கானி, ஈரானியக் கணிதவியலாளர் (இ. 2017)

1981 – ராமி மலேக், அமெரிக்க நடிகர்

1988 – மார்செலோ, பிரேசில் காற்பந்தாட்ட வீரர்

இன்றைய தின இறப்புகள்

1884 – பெட்ரிக் சிமேத்தானா, செக் இசையமைப்பாளர் (பி. 1824)

1910 – வில்லியம் ஹக்கின்ஸ், ஆங்கிலேய வானியலாளர் (பி. 1824)

1952 – யு. ராமா ராவ், தென்னிந்திய அரசியல்வாதி

1968 – க. கணபதிப்பிள்ளை, இலங்கைத் தமிழறிஞர், பேராசிரியர் (பி. 1903)

1970 – நெல்லி சாக்ஸ், நோபல் பரிசு பெற்ற செருமானியக் கவிஞர் (பி. 1891)

1973 – பிரான்சஸ் மரியன், அமெரிக்க எழுத்தாளர், ஊடகவியலாளர் (பி. 1888)

1980 – சி. ஏ. முகிலன், தமிழ்த் திரைப்பட இயக்குநர், திரைக்கதை எழுத்தாளர் (பி. 1933)

1980 – பெட்டி நெசுமித் கிரகாம், அமெரிக்கத் தட்டச்சாளர், வணிகக் கலைஞர் (பி. 1924)

1984 – மு. அ. முத்தையா, தமிழக அரசியல்வாதி (பி. 1905)

1994 – எரிக் எரிக்சன், செருமானிய-அமெரிக்க உளவியலாளர் (பி. 1902)

2022 – மயிலங்கூடலூர் பி. நடராசன், ஈழத்துத் தமிழறிஞர், கவிஞர், எழுத்தாளர் (பி. 1939)

இன்றைய தின சிறப்பு நாள்

உலக செவிலியர் நாள்