ஏப்ரல் 7 கிரிகோரியன் ஆண்டின் 97 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 98 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 268 நாட்கள் உள்ளன.

இன்றைய தின நிகழ்வுகள்

451 – அட்டிலா பிரான்சின் மெட்சு நகரை சூறையாடி ஏனைய நகரங்களையும் தாக்கினான்.

529 – சட்டவியலின் அடிப்படை ஆக்கமான Corpus Juris Civilis என்ற அடிப்படை ஆக்கத்தின் முதல் வரைபை கிழக்கு உரோமைப் பேரரசர் முதலாம் ஜஸ்டினியன் வெளியிட்டார்.

1141 – மெட்டில்டா இங்கிலாந்தின் முதலாவது பெண் பேரரசியாக முடிசூடினாள்.

1521 – பெர்டினென்ட் மகலன் பிலிப்பீன்சின் சேபு தீவை அடைந்தார்.

1541 – பிரான்சிஸ் சவேரியார் போர்த்துக்கீச கிழக்கிந்தியாவுக்கான பயணத்தை மேற்கொண்டு லிஸ்பன் நகரில் இருந்து புறப்பட்டார்.

1767 – பர்மிய-சியாமியப் போர் ((1765–67) முடிவுக்கு வந்தது.

1789 – மூன்றாம் செலீம் உதுமானியப் பேரரசின் சுல்தானாகவும், இசுலாமின் கலீபாவாகவும் நியமிக்கப்பட்டார்.

1827 – ஆங்கிலேய மருந்தியலாளர் ஜோன் வோக்கர் தான் முந்தைய ஆண்டு கண்டுபிடித்த தீக்குச்சியை விற்பனைக்கு விட்டார்.

1829 – பின்னாள் புனிதர் இயக்கத்தின் நிறுவனர் இரண்டாம் யோசப்பு இசுமித்து மோர்மொன் நூலை மொழிபெயர்க்க ஆரம்பித்தார்.

1831 – பிரேசிலின் முதலாம் பெட்ரோ பேரரசர் தமது பதவியைத் துறந்து, தனது சொந்த நாடான போர்த்துகல் நான்காம் பேதுரோ என்ற பெயரில் மன்னரானார்.

1868 – கனடாக் கூட்டமைப்பின் தந்தைகளுள் ஒருவர் தோமசு டார்சி மெக்கீ படுகொலை செய்யப்பட்டார்.

1906 – விசுவியசு எரிமலை வெடித்தில் நாபொலியில் பெரும் சேதம் ஏற்பட்டது.

1906 – எசுப்பானியா மற்றும் பிரான்சு ஆகியவற்றின் கட்டுப்பாட்டில் மொரோக்கோ வந்தது.

1927 – முதலாவது தொலைத்தூர தொலைக்காட்சி சேவை வாசிங்டன் நகரம், நியூயோர்க் நகரம் ஆகியவற்றிற்கிடையில் மேற்கொள்ளப்பட்டது.

1928 – வால்ட் டிஸ்னி தனது புகழ்பெற்ற கார்ட்டூன் பாத்திரமான மிக்கி எலியின் படத்தை வரைந்தார்.

1939 – இரண்டாம் உலகப் போர்: இத்தாலி அல்பேனியாவை முற்றுகையிட்டது.

1942 – இரண்டாம் உலகப் போர்: ஆட்மிரால்ட்டி தீவுகளை சப்பான் கைப்பற்றியது.

1943 – உக்ரைனில் டெரெபோவ்லியா என்ற இடத்தில் நாட்சிகள் 1,100 யூதர்களை அரை நிர்வாணமாக்கி நகர வீதிவழியே அழைத்துச் சென்று பின்னர் அவர்களைச் சுட்டுக் கொன்று புதைத்தனர்.

1945 – இரண்டாம் உலகப் போர்: உலகின் மிகப்பெரும் போர்க்கப்பலான சப்பானின் யமாட்டோ ஓக்கினாவா அருகில் தென்கோ நடவடிக்கையின் போது அமெரிக்கப் கடற்படையினரால் மூழ்கடிக்கப்பட்டது.

1946 – பிரான்சிடம் இருந்தான சிரியாவின் விடுதலை அங்கீகரிக்கப்பட்டது.

1948 – உலக சுகாதார அமைப்பு ஐக்கிய நாடுகள் அவையால் தொடங்கப்பட்டது.

1948 – சீனாவில் ஷங்காயில் பௌத்தமத தலம் ஒன்று எரிந்ததில் 20 புத்த குருக்கள் உயிரிழந்தனர்.

1955 – வின்ஸ்டன் சர்ச்சில் ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர் பதவியில் இருந்து விலகினார்.

1964 – ஐபிஎம் தனது சிஸ்டம்/360 ஐ அறிவித்தது.

1978 – யாழ்ப்பாணத்தில் இலங்கையின் காவல்துறை அதிகாரி பஸ்தியாம்பிள்ளை உட்பட பல காவல்துறையினர் போராளிகளால் கொல்லப்பட்டனர்.

1978 – நியூத்திரன் குண்டு தயாரிக்கும் திட்டத்தை அமெரிக்கத் தலைவர் ஜிம்மி கார்ட்டர் கை விட்டார்.

1983 – ஸ்டோரி மஸ்கிரேவ், டொன் பீட்டர்சன் இருவரும் விண்ணோடம்|விண்ணோடத்தில்]] இருந்து விண்ணில் நடந்த முதல் வீரர்களானார்கள்.

1989 – கொம்சொமோலெட்ஸ் என்ற சோவியத் நீர்மூழ்கிக் கப்பல் நோர்வேயில் விபத்துக்குள்ளாகி மூழ்கியதில் 42 பேர் உயிரிழந்தனர்.

1990 – எசுக்காண்டினாவியன் ஸ்டார் பயணிகள் கப்பல் தீப்பிடித்ததில் 159 பேர் உயிரிழந்தனர்.

1994 – ருவாண்டா இனப்படுகொலை: ருவாண்டாவின் கிகாலியில் துட்சி இனத்தவர்களை அழிக்கும் படலம் ஆரம்பமானது.

1995 – உருசியத் துணை இராணுவப் படைகள் செச்சினியாவின் சமாசுக்கி நகரில் பொதுமக்களைத் தாக்கிக் கொன்றன.

2003 – அமெரிக்கப் படைகள் பக்தாதைக் கைப்பற்றின. அடுத்த இரு நாட்களில் சதாம் உசைனின் ஆட்சி வீழ்ந்தது.

2007 – தமிழ்நாட்டில் சென்டூரில் நெடுஞ்சாலை அமைப்புக்கென கொண்டு செல்லப்பட்ட வெடிபொருட்கள் அடங்கிய வாகனம் ஒன்று வெடித்ததில் 16 பேர் உயிரிழந்தனர்.

2009 – பெருவின் முன்னாள் அரசுத்தலைவர் ஆல்பர்ட் புஜிமோரி பொதுமக்கள் படுகொலைகள், கடத்தல்களுக்கு உத்தரவிட்டமைக்காக 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்றார்.

2015 – தமிழகத்தைச் சேர்ந்த 20 பேர் செம்மரக் கடத்தல் குற்றவாளிகள் என்று கூறப்பட்டு ஆந்திரப்பிரதேச கடத்தல் தடுப்புப் படையினரால் படுகொலை செய்யப்பட்டனர்.

இன்றைய தின பிறப்புகள்

1506 – பிரான்சிஸ் சவேரியார், இயேசு சபையைத் தோற்றுவித்த எசுப்பானியப் புனிதர் (இ. 1552)

1770 – வில்லியம் வேர்ட்ஸ்வொர்த், ஆங்கிலேயக் கவிஞர் (இ. 1850)

1889 – கேப்ரியெலா மிஸ்திரெல், நோபல் பரிசு பெற்ற சிலி கவிஞர் (இ. 1957)

1890 – விக்டோரியா ஒகாம்போ, அர்ச்செந்தீன இலக்கியவாதி, எழுத்தாளர் (இ. 1979)

1894 – லூயிஸ் ஹாம்மெட், அமெரிக்க வேதியியலாளர் (இ. 1987)

1903 – மு. பாலசுந்தரம், இலங்கை அரசியல்வாதி (இ. 1965)

1920 – ரவி சங்கர், இந்திய-அமெரிக்க சித்தார் கலைஞர் (இ. 2012)

1926 – பிரேம் நசீர், இந்திய நடிகர் (இ. 1989)

1935 – எஸ். பி. முத்துராமன் தமிழ்த்திரைப்பட இயக்குனர்

1944 – மகொடோ கோபயாஷி, நோபல் பரிசு பெற்ற சப்பானிய இயற்பியலாளர்

1944 – கெர்ஃகாத் சுரோடர், செருமனியின் 7வது அரசுத்தலைவர்

1947 – மக்தூம் சகாபுதீன், பாக்கித்தானிய அரசியல்வாதி.

1954 – ஜாக்கி சான், ஆங்காங் நடிகர்

1962 – ராம் கோபால் வர்மா, இந்தியத் திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர்

1962 – கோவை சரளா, தென்னிந்தியத் திரைப்பட நடிகை

1964 – ரசல் குரோவ், நியூசிலாந்து-ஆத்திரேலிய நடிகர்

இன்றைய தின இறப்புகள்

AD 30 – நாசரேத்தின் இயேசு கிறித்து, (சிலுவையில் அறைந்த நாள்)[1][2][3] (b. circa 4 BC)

1614 – எல் கிரேக்கோ, கிரேக்க-எசுப்பானிய ஓவியர், சிற்பி (பி. 1541)

1804 – டூசான் லூவர்சூர், எயிட்டி இராணுவத் தலைவர் (பி. 1743)

1891 – பி. டி. பர்னம், அமெரிக்கத் தொழிலதிபர் (பி. 1810)

1947 – ஹென்றி ஃபோர்ட், அமெர்க்கத் தொழிலதிபர், பொறியியலாளர் (பி. 1863)

1971 – கே. சுப்பிரமணியம், தென்னிந்தியத் திரைப்பட இயக்குனர் (பி. 1904)

1979 – ஏ. வி. பி. ஆசைத்தம்பி, தமிழக அரசியல்வாதி, எழுத்தாளர், இதழாளர் (பி. 1929)

1998 – எஸ். வி. வெங்கட்ராமன், தென்னிந்தியத் திரைப்பட இசையமைப்பாளர் (பி. 1911)

2001 – கோ. நா. இராமச்சந்திரன், இந்திய இயற்பியலாளர் (பி. 1922)

2004 – கேளுச்சரண மகோபாத்திரா, இந்திய செவ்வியல் நடனக் கலைஞர் (பி. 1926)

2009 – ராஜா செல்லையா, இந்தியப் பொருளாதார அறிஞர் (பி. 1922)

2014 – வி. கே. மூர்த்தி, தென்னிந்திய ஒளிப்பதிவாளர் (பி. 1923)

2015 – கமலினி செல்வராஜன், ஈழத்து நாடக, திரைப்பட நடிகை, வானொலி ஒலிபரப்பாளர் (பி. 1954)

இன்றைய தின சிறப்பு நாள்

ருவாண்டா இனப்படுகொலை நினைவு நாள்

பெண்கள் நாள் (மொசாம்பிக்)

உலக சுகாதார நாள்