மார்ச்சு 13 கிரிகோரியன் ஆண்டின் 72 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 73 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 293 நாட்கள் உள்ளன.

இன்றைய தின நிகழ்வுகள்

624 – பதுருப் போர்: முகம்மது நபியின் இராணுவத்தினருக்கும், மக்காவின் குறைசிகளுக்கும் இடையில் ஹெஜாஸ் பகுதியில் போர் மூண்டது. முசுலிம்கள் இப்போரில் வெற்றி பெற்றமை இசுலாமுக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது.

1138 – கர்தினால் கிரெகோரியோ கோண்டி எதிர்-திருத்தந்தையாக ஆறாம் விக்டர் என்ற பெயரில் நியமிக்கப்பட்டார்.

1567 – எண்பதாண்டுப் போர் ஆரம்பமானது.

1639 – ஆர்வர்டு கல்லூரிக்கு சமயவாதி யோன் ஆர்வர்டு என்பவரின் பெயர் இடப்பட்டது.

1640 – இலங்கையில் காலிக் கோட்டை ஒல்லாந்தரால் கைப்பற்றப்பட்டது. கோசுட்டர் இலங்கையின் இடச்சு ஆளுநராக நியமிக்கப்பட்டார்.[1]

1697 – கடைசி மாயா பேரரசின் தலைநகரம் நோச்பெட்டென் எசுபானிய தேடல் வெற்றி வீரர்களிடம் வீழ்ந்தது.

1781 – வில்லியம் எர்செல் யுரேனசு கோளைக் கண்டுபிடித்தார்.

1809 – சுவீடன் மன்னர் நான்காம் குசுத்தாவ் அடொல்ஃப் இராணுவப் புரட்சியில் பதவியிழந்தார்.

1865 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பு ஆப்பிரிக்க அமெரிக்கப் படையினரைப் பயன்படுத்த இணங்கியது.

1881 – உருசியாவின் இரண்டாம் அலெக்சாந்தர் அவரது அரண்மனைக்கு அருகே நடந்த குண்டுத் தாக்குதலில் கொலை செய்யப்பட்டார். (யூலியன் நாட்காட்டியில் இது மார்ச் 1 இல் இடம்பெற்றது).

1884 – எகிப்தின் கட்டுப்பாட்டுக்குள் இருந்த கர்த்தூம் நகர் மீதான சூடான் மகுதிய இயக்கத்தின் முற்றுகை ஆரம்பமானது.

1900 – இரண்டாம் பூவர் போர்: பிரித்தானியப் படைகள் ஆரஞ்சு விடுதலை இராச்சியத்தின் புளும்பொன்டின் நகரைக் கைப்பற்றினர்.

1900 – பிரான்சில் பெண்கள் மற்றும் சிறுவர்களின் வேலை நேரம் சட்டப்படி 11 மணி நேரமாகக் குறைக்கப்பட்டது.

1908 – நெல்லைக்கு வந்த வ.உ.சி, சுப்பிரமணிய சிவா, பத்மநாப அய்யங்கார் ஆகியோர் கைது செய்யப்பட்டதை அடுத்து திருநெல்வேலியில் எழுச்சி ஏற்பட்டது. நால்வர் கொல்லப்பட்டனர்.

1921 – மங்கோலியா சீனாவிடம் இருந்து தனது விடுதலையை அறிவித்தது.

1930 – புளூட்டோ கண்டுபிடிக்கப்பட்ட செய்தி ஆர்வர்டு கல்லூரி வான்காணகத்திற்கு தந்தி மூலம் தெரிவிக்கப்பட்டது.

1933 – பெரும் பொருளியல் வீழ்ச்சி: அமெரிக்க அரசுத்தலைவர் பிராங்க்ளின் ரூசவெல்ட் அறிவித்த கட்டாய 3-நாள் “வங்கி விடுமுறை” முடிவடைந்து அமெரிக்க வங்கிகள் மீண்டும் திறக்கப்பட்டன.

1940 – இந்திய விடுதலைப் போராட்ட வீரர் உதம் சிங் லண்டனில் இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் வைத்து பஞ்சாப் முன்னாள் துணைநிலை ஆளுநர் மைக்கேல் ஒ’டுவையர் என்பவரை சுட்டுக் கொன்றார்.

1940 – உருசிய-பின்லாந்து குளிர்காலப் போர் முடிவுக்கு வந்தது.

1943 – பெரும் இன அழிப்பு: செருமனியப் படையினர் போலந்தின் யூதக் குடியேற்றங்களை அழித்தனர்.

1954 – முதலாம் இந்தோசீனப் போர்: வோ இங்குயென் கியாப் தலைமையிலான வியட் மின் படைகள் பிரெஞ்சுப் படைகளைத் தாக்கினர்.

1957 – கியூபாவின் அரசுத்தலைவர் புல்ஜென்சியோ பாட்டிஸ்ட்டாவைக் கொல்ல மாணவப் புரட்சிவாதிகள் எடுத்த முயற்சி தோல்வியில் முடிந்தது.

1969 – அப்பல்லோ 9 விண்கலம் பாதுகாப்பாக பூமி திரும்பியது.

1979 – கிரெனடாவில் இடம்பெற்ற இராணுவப் புரட்சி ஒன்றில் அதன் பிரதமர் எரிக் கெய்ரி பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.

1988 – உலகின் மிக நீளமான கடலடிச் சுரங்கம், செய்க்கான் சுரங்கம், சப்பானில் கட்டி முடிக்கப்பட்டது.

1992 – கிழக்கு துருக்கியில் இடம்பெற்ற 6.8 ரிக்டர் அளவு நிலநடுக்கத்தில் 498 பேர் உயிரிழந்தனர்.

1996 – இசுக்காட்லாந்து, டன்பிளேன் நகரில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு நிகழ்வில் 16 மாணவர்களும் ஓர் ஆசிரியரும் சுட்டுக் கொல்லப்பட்டனர். கொலையாளி தன்னைத் தானே சுட்டுத் தற்கொலை செய்து கொண்டான்.

1997 – இந்தியாவின் பிறரன்பின் பணியாளர்கள் சபை அதன் தலைவர் அன்னை தெரேசாவின் இடத்துக்கு நிர்மலா ஜோஷியைத் தேர்ந்தெடுத்தது.

2003 – இத்தாலியில் 350,000-ஆண்டு பழமையான மனித அடிச்சுவடுகள் கண்டுபிடிக்கப்பட்டதாக நேச்சர் இதழ் அறிவித்தது.

2007 – 2007 உலகக்கோப்பை துடுப்பாட்டம் (கிரிக்கெட்) போட்டிகள் மேற்கிந்தியத் தீவுகளில் ஆரம்பமானது.

2008 – தங்கத்தின் விலை நியூயார்க்கில் முதல் தடவையாக அவுன்சிற்கு $1,000 ஐத் தாண்டியது.

2012 – சுவிட்சர்லாந்தில் சுரங்கம் ஒன்றில் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியதில் 28 பேர் உயிரிழந்தனர்.

2013 – திருத்தந்தை பிரான்சிசு 266-வது திருத்தந்தையாக கத்தோலிக்க திருச்சபையால் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

2016 – அங்காராவின் மத்திய பகுதியில், குண்டுவெடிப்பு மேற்கொள்ளப்பட்டதில், 37 பேர் கொல்லப்பட்டனர், 127 பேர் காயமடைந்தனர்.

இன்றைய தின பிறப்புகள்

1843 – டபிள்யூ. ஜி. ரொக்வூட், இலங்கைத் தமிழ் அரசியல்வாதி, மருத்துவர் (இ. 1909)

1855 – பெர்சிவால் உலோவெல், அமெரிக்க வானியலாளர், கணிதவியலாளர் (இ. 1916)

1899 – புர்குல ராமகிருஷ்ண ராவ், ஐதராபாது மாநில முதலமைச்சர் (இ. 1967)

1941 – மஹ்மூட் தர்வீஷ், பாக்கிஸ்தானியக் கவிஞர் (இ. 2008)

1949 – சலாகுதீன் காதர் சௌத்ரி, வங்காளதேச அரசியல்வாதி (இ. 2015)

1969 – விஜயேந்திர சரஸ்வதி, காஞ்சி காமகோட்டி பீடத்தின் 70-வது சங்கராச்சாரியார்

1980 – வருண் காந்தி, இந்திய அரசியல்வாதி

இன்றைய தின இறப்புகள்

1804 – தாமோதர பாண்டே, நேபாள இராச்சியத்தின் தலைமை அமைச்சர் (பி. 1752)

1881 – இரண்டாம் அலெக்சாந்தர், உருசியப் பேரரசர் (பி. 1818)

1906 – சூசன் பிரவுன் அந்தோனி, அமெரிக்க செயற்பாட்டாளர் (பி. 1820)

1936 – கா. நமச்சிவாய முதலியார், தமிழகத் தமிழறிஞர், பேராசிரியர் (பி. 1876)

1941 – ம. வே. மகாலிங்கசிவம், ஈழத்துத் தமிழறிஞர், புலவர், சொற்பொழிவாளர் (பி. 1891)

1953 – டி. என். தீர்த்தகிரி, இந்திய விடுதலை இயக்க செயற்பாட்டாளர் (பி. 1880)

1958 – வள்ளத்தோள் நாராயண மேனன், மலையாள எழுத்தாளர் (பி. 1878)

1972 – திருவாளப்புத்தூர் சுவாமிநாதபிள்ளை, தமிழக நடன ஆசிரியர்

1982 – ஏ. நாகப்பச் செட்டியார், இந்தியத் தொழிலதிபர் (பி. 1915)

1986 – பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை, ஈழத்துத் தமிழறிஞர் (பி. 1899)

1986 – மர்ரே ராஜம், தமிழகத் தொழிலதிபர், பதிப்பாளர், கொடையாளர் (பி. 1904)

2000 – பி. பி. குமாரமங்கலம், இந்திய இராணுவப் படைத் தலைவர் (பி. 1913)

2006 – கென்னத் ஸ்ட்ரீட், அமெரிக்க வேதியியலாளர் (பி. 1920)

2015 – தி. சு. கிள்ளிவளவன், தமிழ்நாட்டு அரசியலாளர், எழுத்தாளர், இதழாளர் (பி. 1926)

2015 – சூசெட் ஜோர்டன், பெண்ணுரிமைச் செயற்பாட்டாளர் (பி. 1974)

இன்றைய தின சிறப்பு நாள்

தேசிய யானை நாள் (தாய்லாந்து)