சனவரி 24 கிரிகோரியன் ஆண்டின் 24 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 341 (நெட்டாண்டுகளில் 342) நாட்கள் உள்ளன.

இன்றைய தின நிகழ்வுகள்

41 – உரோமைப் பேரரசர் காலிகுலா அவரது பிரெட்டோரியக் காவலர்களால் படுகொலை செய்யப்பட்டார். காலிகுலாவின் மாமா குளோடியசு பேரரசராக அறிவிக்கப்பட்டார்.

914 – எகிப்து மீதான பாத்திமக் கலீபகத்தின் முதலாவது முற்றுகை ஆரம்பமானது.[1]

1458 – மத்தாயசு கொர்வீனசு அங்கேரியின் அரசராக முடிசூடினார்.

1624 – எத்தியோப்பியாவின் திருமடத்தலைவராக திருத்தந்தை பதினைந்தாம் கிரகோரியால் நியமிக்கப்பட்ட அபொன்சோ மென்டெசு கோவாவில் இருந்து மசாவா நகரை வந்தடைந்தார்.

1679 – இங்கிலாந்தின் இரண்டாம் சார்லசு நாடாளுமன்றத்தைக் கலைத்தார்.

1739 – மராட்டிய தளபதி சிம்னாஜி அப்பா போர்த்துக்கீசப் படைகளைத் தோற்கடித்து, தாராப்பூர் கோட்டையைக் கைப்பற்றினார்.

1742 – ஏழாம் சார்லசு புனித உரோமைப் பேரரசராக முடிசூடினார்.

1835 – பிரேசிலின் சவ்வாதோர், பாகையா நகரில் அடிமைகள் கிளர்ச்சியில் ஈடுபட்டனர்.

1857 – கொல்கத்தா பல்கலைக்கழகம் தெற்காசியாவின் முதலாவது முழுமையான பல்கலைக்கழகமாகத் திறக்கப்பட்டது.

1862 – புக்கரெஸ்ட் உருமேனியாவின் தலைநகராக அறிவிக்கப்பட்டது.

1887 – அபிசீனியப் படைகள் டொகாலி என்ற இடத்தில் இத்தாலியர்களைத் தோற்கடித்தனர்.

1897 – சுவாமி விவேகானந்தர் சிக்காகோவிலிருந்து நாடு திரும்பும் வழியில் யாழ்ப்பாணம் வருகை தந்தார். யாழ் இந்துக் கல்லூரியில் பெரும் வரவேற்பு அளிக்கப்பட்டது.[2]

1908 – பேடன் பவல் இங்கிலாந்தில் முதலாவது சிறுவர் சாரணப் பிரிவை ஆரம்பித்தார்.

1916 – நடுவண் அரசின் வருமான வரி சட்டபூர்வமானது என ஐக்கிய அமெரிக்க உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

1918 – கிரெகோரியின் நாட்காட்டி உருசியாவில் பெப்ரவரி 14 முதல் அறிமுகப்படுத்தப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டது.

1924 – உருசியாவின் பெட்ரோகிராட் நகரம் லெனின்கிராட் எனப் பெயர் மாற்றப்பட்டது.

1939 – சிலியில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 28,000 பேர் உயிரிழந்தனர்.

1942 – இரண்டாம் உலகப் போர்: சப்பானியரின் ஆக்கிரமிப்பில் இருந்த பாங்காக் மீது கூட்டுப் படைகள் குண்டுகளை வீசின.

1943 – இரண்டாம் உலகப் போர்: பிராங்க்ளின் ரூசவெல்ட், வின்ஸ்டன் சர்ச்சில் ஆகியோர் தமது கசபிளாங்கா உச்சி மாநாட்டை முடித்துக் கொண்டனர்.

1961 – இரண்டு H-குண்டுகளை ஏற்றிச் சென்ற குண்டு-வீச்சு விமானம் ஒன்று வட கரொலைனாவில் நடுவானில் இரண்டாகப் பிளந்தது. ஐதரசன் குண்டு ஒன்றின் யுரேனியம் கருவம் காணாமல் போனது.

1966 – ஏர் இந்தியா விமானம் ஒன்று பிரான்சுக்கும் இத்தாலிக்கும் இடையில் வீழ்ந்ததில் 117 பேர் உயிரிழந்தனர்.

1968 – வியட்நாம் போர்: ஆத்திரேலியாவின் முதலாவது சிறப்புப் பணிப்பிரிவு வட வியட்நாம் இராணுவம், மற்றும் வியட்கொங் மீது தாக்குதலக்ளை ஆரம்பித்தது.

1972 – இரண்டாம் உலகப் போரில் காணாமல் போன சப்பானியப் படைவீரன் சொயிச்சி யாக்கோய் என்பவன் குவாம் காடு ஒன்றில் மறைந்திருக்கக் கண்டுபிடிக்கப்பட்டான்.

1978 – கொசுமசு 954 என்ற சோவியத் செய்மதி பூமியின் வளிமண்டலத்துள் எரிந்து அதன் பகுதிகள் கனடாவின் வடமேற்குப் பிரதேசத்தில் வீழ்ந்தன.

1984 – முதலாவது ஆப்பிள் மாக்கின்டொஷ் தனி மேசைக் கணினி அமெரிக்காவில் விற்பனைக்கு வந்தது.

1986 – வொயேஜர் 2 விண்கலம் யுரேனசின் 81,500 கிமீ தூரத்துக்குள் வந்தது.

1990 – சப்பான் ஐட்டென் என்ற தனது முதலாவது நிலவுச்சலாகையை ஏவியது.

1996 – மாஸ்கோவுக்கு உளவு பார்த்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்ட நிலையில் போலந்துப் பிரதமர் ஜோசப் அலெக்ஸ்கி தனது பதவியைத் துறந்தார்.

2006 – இலங்கை ஊடகவியலாளர் சுப்பிரமணியம் சுகிர்தராஜன் திருகோணமலையில் ஆளுநர் செயலகத்திற்கு அருகாமையில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார்.

2007 – சூடானிலிருந்து 103 பயணிகளுடன் சென்ற விமானம் நடு வானில் கடத்தப்பட்டது.

2009 – இலங்கை ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட அரசுத்தலைவர் தேர்தலுக்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் கொழும்பில் காணாமல் போனார். இவர் கொல்லப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

2009 – பிரான்சு, பொர்தோ அருகில் சூறாவளி தாக்கியதில் 26 பேர் உயிரிழந்தனர்,.

2011 – மாஸ்கோவின் தமதேதவோ வானூர்தி நிலையத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 35 பேர் கொல்லப்பட்டனர்.

இன்றைய தின பிறப்புகள்

1882 – அரோல்டு டி. பாப்காக், அமெரிக்க வானியலாளர் (இ. 1968)

1915 – சா. பஞ்சு, தென்னிந்தியத் திரைப்பட இயக்குநர் (இ. 1984)

1922 – ராஜேஸ்வரி சாட்டர்ஜி, இந்தியாவின் முதல் பெண் அறிவியலாளர் (இ. 2010)

1924 – சி. பி. முத்தம்மா, இந்திய சிப்பாய், சாதனையாளர் (இ. 2009)

1924 – கர்ப்பூரி தாக்கூர், பீகார் மாநில முதலமைச்சர் (இ. 1988)

1941 – தான் செட்சுமன், நோபல் பரிசு பெற்ற இசுரேலிய வேதியியலாளர்

1947 – மிசியோ காகு, அமெரிக்க இயற்பியலாளர்

1953 – மூன் சே-இன், தென் கொரியாவின் 19-வது அரசுத்தலைவர்

1981 – ரியா சென், இந்திய நடிகை

இன்றைய தின இறப்புகள்

41 – காலிகுலா, உரோமைப் பேரரசர் (பி. 12)

817 – நான்காம் ஸ்தேவான் (திருத்தந்தை) (பி. 770)

1914 – டேவிட் கில், இசுக்காட்டிய வானியலாளர் (பி. 1843)

1961 – சி. கே. சுப்பிரமணிய முதலியார், தமிழறிஞர், உரையாசிரியர் (பி. 1878)

1965 – வின்ஸ்டன் சர்ச்சில், ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர், இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்றவர் (பி. 1874)

1966 – ஓமி பாபா, இந்திய இயற்பியலாளர் (பி. 1909)

2006 – சுப்பிரமணியம் சுகிர்தராஜன், இலங்கை ஊடகவியலாளர், செயற்பாட்டாளர் (பி. 1970)

2011 – பீம்சென் ஜோஷி, இந்தியப் பாடகர் (பி. 1922)

2012 – சுகுமார் அழீக்கோடு, இந்திய எழுத்தாளர் (பி. 1926)

2015 – வி. எஸ். ராகவன், தமிழ்த் திரைப்பட, நாடக நடிகர் (பி. 1925)

இன்றைய தின சிறப்பு நாள்

இணைப்பு நாள் (உருமேனியா)

தேசிய பெண் குழந்தை நாள் (இந்தியா)