
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள வீரகநல்லூர் கிராமத்தில் கோடீஸ்வரி என்பவர் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருகிறார். இவரிடம் அப்பகுதியை சேர்ந்த மக்கள் சிலர் பட்டா வாங்குவதற்காக சென்றுள்ளனர். அப்போது கோடீஸ்வரி ரூ 3000 வரை லஞ்சம் பெற்றுள்ளார். கிட்டத்தட்ட 25 குடும்பங்களிடமிருந்து இவர் ரூ.75 ஆயிரம் வரை லஞ்சம் பெற்றதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக கிராமத்தை சேர்ந்த ஒருவர் லஞ்ச ஒழிப்பு துறை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் படி காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை நடத்திய போது கோடீஸ்வரி லஞ்சம் வாங்கியது உறுதி செய்யப்பட்டது. அதாவது ஒருவரிடம் இருந்து கோடீஸ்வரி லஞ்சம் வாங்கும் போது மறைந்திருந்த காவல்துறையினர் கையும் களவுமாக பிடித்தனர். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.