நான் சேகர் ரிட்டன்ஸ் திரைப்படத்தின் வாயிலாக தமிழ் திரையுலகில் ரீ என்ட்ரி கொடுத்தார் வடிவேலு. இந்த படத்தை அடுத்து மாமன்னன், சந்திரமுகி 2 ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதில் சந்திரமுகி-2 சூட்டிங்கின் போது வடிவேலு சொன்ன நேரத்துக்கு வருவதில்லை என சொல்லப்படுகிறது. படத்தின் கால்ஷீட் காலை 9 மணிக்கு என சொன்னால், முதலில் 10 மணிக்கு வருகிறேன் என கூறுகிறாராம்.

அதன்பின் 11 மணிக்குள் வருகிறேன் என கூறிகிறார். மீண்டும் கேட்டால் 12 மணிக்குள் வந்து விடுகிறேன் என்று கூறுகிறாராம் வடிவேலு. அதனை தொடர்ந்து 12 மணி ஆன பிறகு அவருக்கு போன் கால் செய்தால் ஸ்விச் ஆஃப் என வருகிறதாம். இவ்வாறு செய்து வருவதால் சந்திரமுகி-2 படத்திலிருந்து வடிவேலுவின் பல காட்சிகளை தூக்கிவிட்டதாக சொல்லப்படுகிறது.